
நமது பாரதநாட்டில் ஆண்களைப் போல பெண்பாற்புலவர்களும் எல்லா மொழிகளிலும் இருக்கிறார்கள். சங்கத்தமிழ் கொஞ்சிய தங்கக் காலத்திலும் காமக்கண்ணியார், வெள்ளிவீதியார் போன்ற பல பெண்பாற்புலவர்களைக் காணமுடியும். பிற்காலத்திலும் அவ்வையார், ஆண்டாள் போன்ற கவிஞர்களும் தமிழன்னைக்குப் பாமுடி சூட்டினர். இன்றளவும் இத்தகைய பெண்பாற்புலவர்களின் கொடி பட்டொளி வீசத்தான் செய்கிறது. அதைப்போலவே வடமொழியிலும் பண்டைக்காலந்தொட்டே பல பெண்பாற் கவிஞர்களும் ரிஷிகளும் இருந்தனர். அத்தகைய பெண் ரிஷிகளை ரிஷிகா என்று குறிப்பிடுவர். வேதங்களில் இருபத்தேழு ரிஷிகாக்களைப் பற்றிய குறிப்புள்ளது. விச்வவாரா,…
தொடர்ந்து வாசிப்பு