பரதமுனிவரின் பிறப்பிடம்

2530017871_9146840b77_z

இந்திய நாடகவியலின் விழுமிய வடிவாய்த் திகழும் பரதமுனிவர் நாடகவியலுக்கே இலக்கணமான நாட்ய சாஸ்த்ரத்தை இயற்றியவர். நாடகவியலுக்கே உறுபொருளாய்த் திகழும் இந்நூலில் அவருடைய தற்குறிப்புக்களைப் பற்றிய கருத்துக்கள் அதிகமாக இல்லை. அவர் ஒரு முனிவர் என்பதும் அவருடைய காலம் பொயுமு இரண்டு முதல் பொயு இரண்டாகலாம் என்பதும் மட்டுமே அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்து. ஆயினும் அவருடைய பிறப்பிடத்தைப் பற்றிய எவ்விதக் கருத்தும் இல்லை. ஈண்டு அவருடைய நாட்ய சாஸ்த்ரத்தில் கிடைக்கும் ஒரு குறிப்பை வைத்து அவருடைய பிறப்பிடத்தைக் கண்டறிய…

தொடர்ந்து வாசிப்பு

ராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு

????????????????????????????????????

     பின்வரும் கல்வெட்டு போளூர் தாலூகாவிலுள்ள தென்மாதி மங்கலம் என்னுமூரின் அருகிலுள்ள மலையின் மீது உள்ளூரில் அடுக்கங்கல் என்று வழங்கப்பெறும் ஒரு கல்லில் பொறிக்கப்பெற்றதாகக் கண்டெடுக்கப் பெற்றது. இது வடமொழியில் 10-11 ஆம் நூற்றாண்டிற்கான க்ரந்த லிபியில் அமைந்தது. இந்தக் கல்வெட்டு 1933-34 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை ஆண்டறிக்கையில் 50 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது. இதுவரை இதன் வரிகள் வெளியாகாமையால் மத்திய தொல்லியல் துறையிலிருந்து அதன் மைப்படியைப் பற்று ஈண்டு வெளியிடுகிறேன்.      இந்தக் கல்வெட்டு…

தொடர்ந்து வாசிப்பு