ஸிம்ஹவர்மனின் சிவன்வாசல் கல்வெட்டு – க்ரந்த லிபியில் முதன் முதல் கல்வெட்டு

sivanvasal

     இந்தக் கல்வெட்டு திருவள்ளூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள சிவன்வாசல் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு வைகுண்டநாதருக்கான ஒரு பழைய கோயிலில் படிக்கட்டாக இருந்த கல்லிலிலிருந்து கண்டெடுக்கப்பெற்றது.      இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் மிகப்பழைய க்ரந்த லிபியிலும் அமைந்தது. இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் திரு. என்.வெங்கட ரமணையா என்பவரால் பதிப்பிக்கப்பெற்றது. அவர் இதை ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதினார். இந்தக் கல்வெட்டு பல்லவகுலத்தைச் சேர்ந்த ஸிம்ஹவர்மனை வர்ணிக்கிறது. அவன்…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் மஹேந்த்ர பல்லவரின் சேஜர்லா கல்வெட்டு

Amvar_Chejerla_Kapoteswara_temple_in_guntur_district_2

     இந்த வடமொழிக் கல்வெட்டு அறிஞர்களால் மிக அரிதாகவே எடுத்தாளப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டம் நரஸராவ் தாலுகாவிலுள்ள சாஸர்லாவிலுள்ள ஸ்ரீகபோதேச்வரர் கோயிலில் முன்னுள்ள நந்தி மண்டபத்தில் உள்ள கற்பலகையில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பெரும்பாலும் அழிந்திருந்தாலும் சிறு சிறு பகுதிகளோ படிக்கவும் புரிந்து கொள்ளவும்  இயலும் வகையில் அமைந்திருந்தாலும் கூட இந்தக் கல்வெட்டு முக்கியமானதாகும். காரணம் இந்தக் கல்வெட்டு அமைந்திருப்பதால் இந்தப் பகுதியில் பல்லவர்களின் அரசு கோலோச்சியது என்பதை உய்த்துணரவியல்கிறது. ஆகவே இந்தப் பகுதியை…

தொடர்ந்து வாசிப்பு