மேதகு நந்திபுரி ஸுந்தர சோழன் அரசுகட்டிலேறிய காலம் பொயு 957 என்று நிறுவப்பெற்றிருக்கிறது. இந்த முடிவு அவனுடைய கல்வெட்டுக்களிலுள்ள வானியற் குறிப்புக்களைக் கொண்டு முடிவு செய்யப்பெற்றுள்ளது, அவனுடைய கல்வெட்டாவணங்கள் பதினேழாம் ஆட்சியாண்டு வரை கிடைத்துள்ளன. திருமால்புரம் (S.I.I III, 117 & 118), நெமலி (139 of 1942-43), அல்லூர் (377 of 1903) மற்றும் திருமழவாடியிலுள்ள (2 of 1920) கல்வெட்டுக்கள் அவருடைய பதினேழாம் ஆட்சியாண்டைக் கொண்டிருக்கின்றன. கோயில் தேவராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டு (230…
தொடர்ந்து வாசிப்பு