முதலாம் கீர்த்தி வர்மனின் பாதாமி குடைவரைக் கல்வெட்டு

BADAMI_1

இந்தக் கல்வெட்டு பாதாமியிலுள்ள குடவரையின் முன்பு காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு 25 அங்குல நீளமும் 45 அங்குல உயரமும் உடையது. எழுத்துக்கள் சிறிது சிதைவடைந்திருக்கின்றன. இந்தக் கல்வெட்டு பேராசிரியர் எக்லிங்கால் இண்டியன் ஆண்டிகுவரியின் மூன்றாந் தொகுதியில் 305 ஆம் பக்கத்தில் பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு முதலாம் கீர்த்திவர்மனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் அவனுடைய இளவலான மங்களேச்வரன் திருமாலுக்கான கோயிலை எடுப்பித்து அதற்கு மதிலையும் கட்டிய குறிப்பைத் தருகிறது. மேலும் அந்தக் கோயிலில் இறைவனின் உருவத்தை நிறுவும் தறுவாயில் அந்தணர்களுக்கு…

தொடர்ந்து வாசிப்பு

மேலைச் சாளுக்ய பேரரசின் பெண்ணரசி

vijaya

     முதலாம் நரஸிம்ஹ பல்லவன் மேலைச் சாளுக்யர் தம் கோநகராம் வாதாபியைத் தூளாக்கி எரிகொளுவிய செய்தியை நாமறிவோம். ஈடற்ற பேரரசனாகத் திகழ்ந்த இரண்டாம் புலகேசியும் கூட அவனது கரங்களால் மாண்டுபட்டான். இவ்விரு செய்திகளும் வாதாபியிலுள்ள பொயு 642 இல் பொறிக்கப்பெற்ற பல்லவ சாஸனத்தாலும் அவர்தம் குலச் செப்பேடுகளாலும் உய்த்துணரக் கிடக்கிறது. இரண்டாம் புலகேசியின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய மகன்களான ஆதித்யன், சந்த்ராதித்யன் மற்றும் முதலாம் விக்ரமாதித்யன் ஆகியோர் நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். விக்ரமாதித்யனின் ஹொன்னூர் செப்பேட்டில் இவர்களின்…

தொடர்ந்து வாசிப்பு

ஒரு சாளுக்ய காதல் கல்வெட்டு

794px-7th_century_Kannada_inscription_at_Mahakutesvara_temple_in_Mahakuta

வரலாற்றில் இதுவரை பலவிதமான காதற்கல்வெட்டுக்களைக் கண்டிருக்கிறோம். அத்தகையதோரு கல்வெட்டொன்று பாதாமி சாளுக்யர்களின் சிற்பக் கலைப்படைப்பான மஹாகூடத்திலுள்ள மஹாகூடேச்வரர் கோயிலில் காணப்பெறுகிறது. இந்தக் கோயில் மேலைச்சாளுக்ய வேந்தன் மங்களேசனின் (பொயு 596-609) காலத்தியதாக கருதப்பெறுகிறது. மேற்கொண்டு செய்த ஆய்வுகள் இந்தக் கோயில் பொயு 625 இல் மீளமைக்கப்பெற்றதையும் பிற்காலத்திய சேர்க்கைகளையும் கொண்டு திகழ்வதையும் வெளிப்படுத்துகின்றன. இரண்டாம் புலகேசியின் கொள்பெயரனும் பொயு 696 முதல் 733 வரை ஆண்டவனுமான விஜயாதித்யனே இப்போதைய கதையின் நாயகன். அவனுடைய காலத்தில் வாழ்ந்த அவனுடைய…

தொடர்ந்து வாசிப்பு

புரவியைச் சேர்ந்த பகலவன்

Sūrya & Saṃjñā

     கதிரவன் விச்வகர்மாவின் மகளான ஸம்ஜ்ஞா தேவியை மணந்திருந்தான். அவனுடைய வெம்மையைத் தாளவொண்ணாத அவள் தனது சாயையை – நிழலை விடுத்து விட்டு தந்தைவீடு சென்றாள். அங்கும் இருக்க முடியாததால் குதிரையின் வடிவெடுத்து உத்தர குருதேசத்திற்குச் சென்று கடுந்தவமியற்றினாள். மாற்றாந்தாய் செயலினால் மனமுடைந்த கூற்றுவன் தாயை இகழ சாயை அவனைச் சபித்தாள். அதன் பிறகு தந்தையிடம் முறையிட்டான் கூற்றுவன். கதிரவனின் மிரட்டலால் உண்மையைக் கூறினாள் சாயா. உண்மையை அறிந்த கதிரவன் தனது மாமனார் வீடு சென்று தேடினான்….

தொடர்ந்து வாசிப்பு