1. முதலாம் புலகேசியின் பாதாமி கல்வெட்டு (காலம் சக ஆண்டு 465 – பொயு 543)

pulakesi

இந்தக் கல்வெட்டு பாதாமியிலுள்ள பெத்தாரப்பா கோயிலின் பின்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 250 அடி உயரத்திலுள்ள ஒரு மலைப்பாறையின் நெருங்க முடியாத பகுதியில் அமைந்துள்ளது. கீழ்மேற்காக அமைந்துள்ள ஒரு பெரும்பாறையில் அமைந்துள்ள இந்தக் கல்வெட்டிற்குச் செல்லும் பாதையும் மிகக் குறுகலானது. இந்தக் கல்வெட்டு அந்தப் பாறையின் வடபுறத்தில் அமைந்துள்ளது.             இந்தக் கல்வெட்டை தார்வாரிலுள்ள திரு. ஆர்.எஸ்.பஞ்சமுகி அவர்கள் மிகுந்த முயற்சியோடு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் இரண்டாம் எண்ணோடு பதிப்பித்தார். இந்தக் கல்வெட்டு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் நரஸிம்ஹ வர்மனின் வாதாபிக் கல்வெட்டு

high res

     சாளுக்ய மன்னன் இரண்டாம் புலகேசி இரண்டாம் முறை படையெடுத்து வந்தபோது அவனை எதிர்த்தபடியே முதலாம் நரஸிம்ஹவர்மன் வாதாபி வரைப் போந்ததும் அதனைக் கைப்பற்றியமையும் நாமறிவோம். மணிமங்கலம், சூரமாரம் மற்றும் பரியளம் ஆகிய இடங்களில் நிகழ்ந்த போர்களில் பல்லவர்களின் கை மேலோங்கியிருந்தது. பல்லவர் படை சாளுக்ய நாட்டின் இதயமாகத் திகழ்ந்த வாதாபியில் ஊடுருவி நின்றது. இதன் சாளுக்ய ஆட்சியே முன்காணாவிதமாக நிலைகுலைந்தது. ஈடில்லாப் பேரரசனான இரண்டாம் புலகேசி இறந்து பட்டனன். சீன யாத்ரிகனான ஹ்வான் ஸாங் சாளுக்ய…

தொடர்ந்து வாசிப்பு

மேலைச் சாளுக்ய பேரரசின் பெண்ணரசி

vijaya

     முதலாம் நரஸிம்ஹ பல்லவன் மேலைச் சாளுக்யர் தம் கோநகராம் வாதாபியைத் தூளாக்கி எரிகொளுவிய செய்தியை நாமறிவோம். ஈடற்ற பேரரசனாகத் திகழ்ந்த இரண்டாம் புலகேசியும் கூட அவனது கரங்களால் மாண்டுபட்டான். இவ்விரு செய்திகளும் வாதாபியிலுள்ள பொயு 642 இல் பொறிக்கப்பெற்ற பல்லவ சாஸனத்தாலும் அவர்தம் குலச் செப்பேடுகளாலும் உய்த்துணரக் கிடக்கிறது. இரண்டாம் புலகேசியின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய மகன்களான ஆதித்யன், சந்த்ராதித்யன் மற்றும் முதலாம் விக்ரமாதித்யன் ஆகியோர் நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். விக்ரமாதித்யனின் ஹொன்னூர் செப்பேட்டில் இவர்களின்…

தொடர்ந்து வாசிப்பு